ஞாயிறு, 7 அக்டோபர், 2012

AirDroid, a fast & free app that lets you wirelessly manage your Android device from a web browser: http://goo.gl/TPnBJ

செவ்வாய், 12 அக்டோபர், 2010

சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்


வ.எண்

சரணாலயத்தின் பெயர்

மாவட்டத்தின் பெயர்

1.

முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா

நீலகிரி

2.

கலக்காடு - முண்டந்துரை புலிகள் சரணாலயம்

திருநெல்வேலி

3.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

காஞ்சிபுரம்

4.

பாயிண்ட் கேளிமர் வனவிலங்கு சரணாலயம்

நாகப்பட்டிணம்

5.

கிண்டி தேசிய பூங்கா

சென்னை

6.

இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா

கோவை

7.

கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம்

கன்னியாகுமரி

8.

வேட்டன்குடி பறவைகள் சரணாலயம்

சிவகங்கை

9.

முக்குரித்தி தேசிய பூங்கா

நீலகிரி

10.

பூலிகட் லேக் பறவைகள் சரணாலயம்

திருவள்ளூர்

11.

கிரிஸ்சல்ட் ஜெயிண்ட் அணில்கள் சரணாலயம், ‚வில்லிப்புத்தூர்

விருதுநகர்

12.

கரிகிளி பறவைகள் சரணாலயம்

காஞ்சிபுரம்

13.

கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம்

14.

வல்லநாடு கருப்பு மான் (பிளாக்பக்) சரணாலயம்

தூத்துக்குடி

15.

மன்னார் வளைகுடா கடல் சார்ந்த தேசிய பூங்கா மற்றும் உயிர்கோள சரணாலயம்

மன்னார் வளைகுடா, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம்

16.

உதயமத்தண்டபுரம் பறவைகள் சரணாலயம்

திருவாரூர்

17.

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா

சென்னை

18.

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

பெரம்பலூர்

19.

வுடுவூர் பறவைகள் சரணாலயம்

திருவாரூர்

20.

சித்ரநுடி பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம்

21.

குந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

திருநெல்வேலி

22.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

ஈரோடு

23.

மேல் செலவனூர் கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம்

24.

திருப்படைமருதூர் பாதுகாப்புச் சரணாலயம்

திருநெல்வேலி


ஞாயிறு, 22 மார்ச், 2009

குமரி மாவட்ட கோட்டைகள்

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைவதற்கு முன்பு வரை திருவிதாங்கூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. எனவே இந்த மாவட்டத்தை சுற்றி ஏராளமான கோட்டைகளை காண முடிகிறது.உதயகிரி கோட்டைநாகர்கோவில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் தக்கலைக்கு அருகில் அமைந்துள்ளது உதயகிரி கோட்டை. 81 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையைச் சுற்றிலும் 16 அடி உயர கருங்கல் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை உருவான வரலாறு மிக சுவாரஸ்யமானது.குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த காலம். திருவிதாங்கூரை மார்த்தாண்ட வர்மா ஆட்சி செய்து கொண்டிருந்தார். மார்த்தாண்ட வர்மாவிற்கும் டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் பகை தலைதூக்கியிருந்த நேரம். குளச்சல் கோட்டை டச்சுக்காரர்களின் கீழ் இருந்தது. அங்கு ஏராளமான வீரர்கள் தங்கியிருந்தனர். போதிய இடமும், உணவும் இல்லாததால் தொற்று வியாதிகள் மூலம் பலர் இறந்தனர்.இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு குளச்சலில் இருந்த டச்சுக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த மார்த்தாண்ட வர்மா திட்டமிட்டார். இந்தத் தாக்குதலை டச்சுக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. டச்சு வீரர்கள் மார்த்தாண்ட வர்மாவால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உதயகிரிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவர் தான் டச்சுத் தளபதி யுஸ்டேஷியஸ் டிலனாய். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டச்சு வீரர்களை விடுதலை செய்ய மார்த்தாண்ட வர்மா ஒப்புக்கொண்டார். ஆனால் டிலனாய் மார்த்தாண்ட வர்மாவின் படையில் சேர விருப்பம் தெரிவித்தார். அப்போது அவருக்கு வயது 26.வாளும், ஈட்டியும் தான் போர் என்று நினைத்தவர்களுக்கு டிரில் பயிற்சி அளித்ததோடு துப்பாக்கி, பீரங்கி இயக்கவும் கற்றுக்கொடுத்தார். தொடர்ந்து மார்த்தாண்ட வர்மா அவரை படைத்தளபதியாக்கினார். தொடர்ந்து 35 வருடங்கள் மார்த்தாண்ட வர்மா படையில் பணியாற்றிய டிலனாய் 1777 ல் காலமானார். அவருடைய உடல் உதயகிரிக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. அருகில் அவருடைய மனைவி, மகனுடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மூன்று கல்லறைகளும் தேவாலய வடிவில் எழுப்பப்பட்டுள்ளது.கண்டுகொள்ளப்படாமல் இருந்த உதயகிரிக்கோட்டை இப்போது புதுப்பிக்கப்பட்டு மான்பூங்கா, மயில்பூங்கா, விருந்தினர் விடுதி என புதுப்பொலிவு பெற்று சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் பேருந்தில் ஏறி புலியூர்க்குறிச்சியில் இறங்கிக்கொள்ளலாம். அங்கிருந்து 30 அடி தொலைவில் அமைந்துள்ளது இந்த உதயகிரிக்கோட்டை.பத்மனாபபுரம் கோட்டைகன்னியாகுமரியில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்தியாவில் வேறெந்த அரண்மனைக்கும் இல்லாத சிறப்பு இந்த அரண்மனைக்கு உண்டு. முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்ட அரண்மனை இது. திருவிதாங்கூரை மார்த்தாண்ட வர்மா ஆட்சி செய்தபோது பத்மநாபபுரம் அதன் தலைநகராக அறிவிக்கப்பட்டது.மார்த்தாண்ட வர்மா தலைநகரை சுற்றி கோட்டையை எழுப்பினார். 186 ஏக்கர் நிலப்பரப்பைச் சுற்றி 16 அடி உயரத்தில் 1744 ல் இந்தக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. கோட்டையில் தலைவாசல் ஒன்றும் சுற்றுப்புறங்களில் ஒன்பது வாசல்களும், ஏராளமான படைக்கொத்தளங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை கேரள அரசின் பராமரிப்பின் கீழ் இருந்து வருகிறது.நாகர்கோவிலில் இருந்து நேரடியாக பத்மனாபபுரத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன. நாகர்கோவிலில் இருந்து தக்கலை சென்று அங்கிருந்தும் பத்மனாபபுரம் செல்லலாம்.மருந்துக்கோட்டைபத்மனாபபுரத்தில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் 400 அடி உயரத்தில் குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது மருந்துக்கோட்டை. பத்மனாபபுரம் கோட்டை வடிவிலேயே இந்தக்கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்பரப்பில் 5 கொத்தளங்களும், பெரிய கல்மண்டபம் ஒன்றும் உள்ளது. கோட்டையின் மேற்பரப்பு இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. உதயகிரி கோட்டையில் உருவாக்கப்பட்ட பீரங்கி படைத்தளத்திற்கு தேவையான வெடி மருந்துகளைத் தயாரிக்கவும், தேவையான வெடி மருந்துகளை பதுக்கி வைக்கவும் இந்தக் கோட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.உதயகிரிக்கோட்டையில் இருந்து இந்த மருந்துக்கோட்டைக்கு சுரங்கப்பாதைகள் இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.மையக்கோட்டைமருந்துக்கோட்டையில் இருந்து தக்கலை செல்லும் வழியில் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது 200 அடி உயரமுள்ள குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது மையக்கோட்டை. இதுவும் பத்மனாபபுரம் அரண்மனை வடிவிலேயே கட்டப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்புள்ள இந்தக் கோட்டையை இப்பகுதி மக்கள் சவக்கோட்டை என்றழைக்கின்றனர். அரச குடும்பத்தினர் இறந்தால் அவர்களை எரியூட்டுவதற்காக இந்தக்கோட்டையை கட்டியிருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக கோட்டையின் உட்பகுதியில் சாம்பல் மேடுகள் திட்டுத்திட்டாக இன்றும் காணக்கிடைக்கிறது.இரணியல் அரண்மனைநாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் வழியில் தக்கலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் முன்னதாக அமைந்துள்ளது இரணியல் அரண்மனை. இந்தப்பகுதி மக்களால் சேரமான் பெருமாளின் கொட்டாரம் என்றே அழைக்கப்படுகிறது.மன்னர் பிரகலாதனின் தந்தை இரண்யகசிபு இந்தப்பகுதியை ஆட்சி செய்ததால் இந்தப் பகுதிக்கு இரணியல் என்று பெயர் வந்ததாக இந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த அரண்மனை 12 ம் நூற்றாண்டில் சேரமன்னன் சேரமான் பெருமாளால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அரண்மனையின் சிறப்பு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய கட்டில். அரண்மனை கட்டிடத்தோடு இல்லாமல் தனியாக அமைந்துள்ள ஒரு சதுர வடிவிலான ஒரு பெரிய அறை. அதைச் சுற்றிலும் காற்று வருவதற்கு வசதியாக மரத்தில் செய்யப்பட்ட அடைப்புச் சுவர்கள். அறையின் நடுவில் உயர்ந்த பீடம், அதன் மேல் தான் இந்தக் கட்டில் காட்சியளிக்கிறது. பீடத்தில் நான்கு தூண்கள், தூண்களின் மேல் கூரை, கூரையைச் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பூவேலைப்பாடுகள் இன்றும் தெளிவாகக் காட்சியளிக்கிறது.அரண்மனை உட்பகுதியில் இருந்து திருவிதாங்கோடு அரண்மனைக்கு சுரங்கப்பாதை செல்லும் சுரங்கப்பாதை தற்போது முற்றிலுமாக அழிந்து காணப்படுகிறது.

கன்னியாகுமரி



பரப்பளவு - 4,433 சதுர கி.மீட்டர்சென்னையிலிருந்து 700 கி.மீட்டர் தூரம்மாவட்டத்தலைநகரம்- நாகர்கோயில்இயற்கை எழில் கொஞ்சும் இந்தியாவின் கடைக்கோடி மாவட்டம். இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என முக்கடலும் சங்கமிப்பது இதன் சிறப்பு. தமிழ்நாடு, கேரளா இரு மாநில எல்லையில் இருப்பதால் மொழி, உணவு, உடை என எல்லாவற்றிலும் இரு மாநில பாதிப்புகளையும் காண முடியும். குமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் குறித்து காண்போம்.குமரி அம்மன் ஆலயம்கன்னியாகுமரியில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது குமரி பகவதி அம்மன் ஆலயம். அன்னை பகவதி திருமணம் செய்து கொள்ளாமல் குமரியாகவே வாழ்வதால் அன்னைக்கு கன்னியாகுமரி என்று பெயர். அதனால் தான் இந்த மாவட்டத்திற்கு கன்னியாகுமரி என்று பெயர் வந்தது. முக்கடலும் சங்கமிக்கும் கடலோரமாக அமைந்துள்ளது இந்தக் கோவில். குமரி அம்மனின் மூக்குத்தி ஒளியால் கவரப்பட்டு வந்த கப்பல் ஒன்று பாறையில் மோதி சிதறி விட்டதாம். அதனால் கடலை நோக்கிய கோவிலின் கருவறை வாசல் மூடப்பட்டிருக்கிறது என்பது ஐதீகம்.கன்னியாகுமரிக்கு சென்னையில் இருந்து பேருந்து அல்லது ரயில் மூலம் செல்லலாம். பேருந்து, ரயில் நிலையங்கள் கோயில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. தங்குவதற்கும் ஏராளமான விடுதிகள் உள்ளன.காலை சூரிய உதயத்தையும், மாலையில் சூரியன் மறைவதையும் காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதைத் தெளிவாக காண்பதற்கு சுற்றுலாத்துறை சார்பில் காட்சிப் கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.விவேகானந்தர் மண்டபம்கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தர் மண்டபம். சிகாகோ உரையை முடித்துக்கொண்டு விவேகானந்தர் இங்குதான் தவம் செய்தாராம். அவரது நினைவாக அவர் தவம் செய்த பாறையின் மேல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீட்டர் கடலின் உள்ளே இது அமைந்துள்ளது. மண்டபத்தின் உள்ளே தியான அறையும் அமைந்துள்ளது. வாரத்தின் எல்லா நாட்களும் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பாறைக்கு படகுப் போக்குவரத்து இருக்கிறது.திருவள்ளுவர் சிலைகன்னியாகுமரி கடலில் மையப்பகுதியில் கம்பீரமாய் நிறுவப்பட்டிருக்கிறது இந்த திருவள்ளுவர் சிலை. திருக்குறளில் 133 அதிகாரங்களையும் நினைவுபடுத்தும் வகையில் 133 அடி உயரத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.காந்தி நினைவு மண்டபம்மகாத்மா காந்தியடிகளின் நினைவாக முக்கடலின் கரையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று சூரிய ஒளி நேரடியாக இந்த சாம்பலின் மேல் விழுவது இதன் சிறப்பு.அரசு பழத்தோட்டம்கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அரசு பழத்தோட்டம். விதவிதமான பழங்கள், வெளிநாட்டுச் செடிகள், பழமையான மரங்கள் என பலவற்றை இங்கு காணலாம். காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலும் இந்தத் தோட்டத்தை பார்வையிடலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இங்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.வட்டக்கோட்டைகுமரியில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் 5 கி..மீட்டர் தூரத்தில் வங்கக் கடற்கரையோரம் அமைந்திருக்கிறது வட்டக்கோட்டை.இருபத்து ஒன்பது அடி உயரத்தில் மூன்றரை ஏக்கர் பரப்பில் உள்ள இக்கோட்டையின் மேற்பகுதியில் துப்பாக்கி மற்றும் பீரங்கியால் சுடுவதற்கு இடைவெளிகள் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களான புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் இப்பகுதியில் துறைமுகம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.மேலும் முத்து குளிக்கும் பணிகளும் நடைபெற்று வந்துள்ளது. இத்தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக கடற்கரையை அடுத்த லீ புரம் என்னும் பகுதியில் கலங்கரை விளக்கம் இருந்த தடயம் இன்னும் உள்ளது.பே வாட்ச் தீம் பார்க்கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் பாதையில் இரண்டு கீலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பே வாட்ச். பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பு. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. காலல 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மாத்தூர் தொட்டில்பாலம்

மாத்தூர் தொட்டில்பாலம்
நாகர்கோவிலில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள்சிதறால்கன்னியாகுமரியில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் சிதறால் மலைக்கோயில் அமைந்துள்ளது. சமணத்துறவிகள் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக இந்த சமணக்கோவில் அமைந்துள்ளது. சமணத் தீர்த்தங்கரர்களின் நினைவாக இந்தியாவில் உள்ள சமணக்கோவில்களில் முக்கியமானது இது. மலைமேல் 3 கி.மீ.நடந்து சென்றால் வேலைப்பாடுகள் மிகுந்த சமணச்சிற்பங்களை காணலாம்.மலைமேல் இருந்து சுற்றிலும் இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்கலாம். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக பேருந்து மூலமோ, கார் மூலமோ சிதறாலை அடையலாம். நாகர்கோவிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.கேரளபுரம்நாகர்கோவிலில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் தக்கலை அருகே அமைந்துள்ளது கேரளபுரம் அதிசய விநாயகர் ஆலயம். இங்குள்ள விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. வருடத்திற்கு ஆறு மாதங்கள் கறுப்பு நிறத்திலும், ஆறு மாதங்கள் வெள்ளை நிறத்திலும் விநாயகர் இருப்பது இக்கோயிலின் சிறப்பு. கோவிலின் கிணறும் அதே நிறங்களை பிரதிபலிப்பது கூடுதல் சிறப்பு.மாத்தூர் தொட்டில்பாலம்மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது இந்தப் பாலம். இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இப்படி மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.1971 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலமாகும். இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.புனித தோமையர்இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அப்போஸ்தலர் என்னும் புனித தோமா. இயேசுவின் காலத்திற்கு பிறகு கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தோமா இந்தியா வந்ததாக கூறப்படுகிறது. 52-23 ம் நூற்றாண்டுகளில் பஞ்சாப் வழியாக கேரளா வந்த அவர் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் மாதா ஆலயத்தை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலயம் தான் தமிழ்நாட்டின் முதல் கிறிஸ்தவ தேவாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.ஆலயம் எழுப்பப்படும் காலங்களில் அவர் திருவிதாங்கோடு செல்லும் வழியில் உள்ள கஞ்சிக்குழி என்னும் இடத்தில் மலைக்குகையில் தங்கியிருந்துள்ளார். அதற்கு ஆதாரமாக மாதாமலை என்று அழைக்கப்படும் இந்த மலையின் அடிவாரத்தில் பெரிய குகை ஒன்று இன்றும் காணப்படுகிறது. இந்த மலையின் மேலே பாறையில் காணப்படும் காலடித்தடம் தோமாவுடையது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.நாகர்கோவில் இருந்து கருங்கல் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் தோமையர் மலையை அடையலாம்.மகாதேவர் கோவில்குமரி மாவட்டத்தின் தென்கோடியில் வைக்கல்லூர் எனும் ஊரில் காணப்பட்ட மணல் மேடுகளின் உட்பகுதியில் புதையுண்டு கிடந்து எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த நூற்றாண்டுகளைக் கடந்த ஆலயம்.பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னர்களால் இவ்வாலயம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடற்கரை அருகில் இருப்பதால் கடல் கொந்தளிப்பால் மணலால் மூடப்பட்டு பின்னர் 1922-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.கருங்கற்களினால் கட்டப்பட்ட இக்கோவிலின் உட்பகுதியில் அழகிய கலைவேலைப்பாடுகள் நிறைந்த நந்தி ஒன்று காணப்படுகிறது. சுற்றியுள்ள பலப் பகுதிகளில் இருந்து ஏராளமான பல பக்தர்கள் தற்போது இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.பேச்சிப்பாறை அணைகுமரி மாவட்ட விவசாயம் இந்த அணையை நம்பித்தான் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த அணை அமைந்துள்ளது. எந்தப் பருவ நிலையிலும் வற்றாதது இந்த அணை. குழந்தைகளோடு சென்றுவர மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகவும் இது விளங்குகிறது. சமீபத்தில் இங்கு படகுப்போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.திற்பரப்பு அருவிகன்னியாகுமரியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது. எல்லாக் காலநிலையிலும் இந்த அருவியில் தண்ணீர் இருப்பது இதன் சிறப்பு. இந்தப் பகுதி முழுவதும் பச்சைப்பசேலென்று கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் திற்பரப்பு செல்லலாம். நாகர்கோவிலில் இருந்து திருவட்டார் அல்லது குலசேகரம் சென்று அங்கிருந்து பேருந்து மூலமும் திற்பரப்பு அருவியை அடையலாம்.திருவட்டார்கன்னியாகுமரியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் ஆயிரம் தூண்களும் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 63 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றது இந்தக் கோயில். கோயிலின் உட்புறத்தில் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பச்சிலையை கொண்டு வரையப்பட்டவை. பல நூறு வருடங்களைக் கடந்தும் இந்த ஓவியங்கள் புதிதாக காட்சியளிப்பது இன்னும் சிறப்பு.வெள்ளிமலைநாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளிமலை முருகன் கோவில். குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு செல்ல மலைமீது 300 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள குகையில் தான் வள்ளியை முருகன் மணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. நாகர்கோவிலில் இருந்து தொடர்ச்சியாக தக்கலைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.
இது சிற்றாறு, மணிமுத்தறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.
பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.